Saturday 31 October 2015

சனாதன தர்மம் - 9 - இந்து தர்மக் கோவில்களும் – தமிழக திராவிட அரசுகளும் – அ.பரிவழகன் – Hindu Temples and Tamilnadu Dravidian Governments


கடவுள் மீது நம்பிக்கையில்லாத கட்சிகளின் அரசுகள் நம் இந்துதர்மக் கடவுள்களின் கோயில்களை நிர்வகிப்பது சற்று விசித்திரமானது, குறிப்பாக திராவிட கட்சிகள். தமிழகத்தில் தீவிர இந்து விரோதப்போக்கை மேற் கொண்ட கட்சிகள் கோவில் நிர்வாகத்தை மட்டும் கைவிடவில்லை காரணம் உண்டியல் !, வருமானம். என்னதான் கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கூறினாலும் ‘உண்டியல் வருமானம் தேவையில்லை’ என்று அவர்கள் கூறியதில்லை. “கோவிலில் இருந்து கிடைக்கப் பெறும் பெருச்செல்வம் அரசுக்கு வருவாய்; நாமோ அதை ஆண்டவனுக்கு அளிக்கும் காணிக்கை என்று நம்புகிறோம்” 
  
கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கும், மதச்சார்பற்ற அரசு என்று கூறுபவர்களுக்கும், எதற்கு நம் கோயில் வருமானம் ? சாமியைத் திட்டி ; பக்தனிடம் காசைப் பிடுங்கும் கூட்டம் இது. சரி ஆலயத்தையாவது ஒழுங்காக பராமரிக்கிரார்களா என்றால் அதுவும் இல்லை.

ஒரு தனியார் தமிழ் நாளிதழலின் (தினமலர்) இணையதளத்தில் சேகரித்து வைக்கபட்டிருக்கும் கோவில்கள் , இந்து தர்மம் பற்றிய அறிய தகவல்கள் கூட தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் இல்லை. கோவில்களில் இருந்து கிடைக்கபெறும் பெரும் வருமானத்தை அரசு கோவிலின் வளர்ச்சிக்கு, பக்தர்களின் வசதிக்கு, இந்து சமய வளர்ச்சிக்கு, மேம்பாட்டிருக்கு முழுமையாக செலவு செய்ய வேண்டும், மாறாக அரசின் மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ; விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடக் கூடாது என்று கூறுபவர்கள், ஏன் கோவில் வருமானத்தை அரசு எடுக்ககூடாது என்று கூறுவதில்லை ? கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்து கடவுள்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாதா ?.இந்து தர்மம், இந்தக் கலாச்சாரத்தின் தர்மம், இம்மண்ணின் தர்மம், நம் கடவுளை அரசு அலுவலகங்களில் வைக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் ?

கோவில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட்டு வந்த அரசு இன்று கோவிலின் அன்றாட சடங்குகளில், பூஜைகளில், விழாக்களில் தலையிடுகிறது. ஆலயங்களின் சடங்குகள், விழாக்கள் போன்றவை அந்த அந்த கோவிலின் குருக்கள், பூசாரிகள், சமயப் பெரியோர்கள், மடாதிபதிகள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அனால் இன்று அரசின் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு கும்பாபிஷேகத்திற்கும், தேரோட்டத்திற்கும் நாள் குறிக்கின்றனர். கோவில் குளங்களும், நிலங்களும் புல், புதர் முளைத்துக் குப்பை மேடுகளாகக் கேட்ப்பாற்றுக் கிடக்கின்றன...

அர்ச்சனைக்குக் காசு ; ஆண்டவனை அருகில் தரிசிக்கக் காசு ; உண்டியலுக்குக் காசு ; சிறப்பு தரிசனம் ; அன்னதானம் ; கோவில் விழா என அணைத்திற்கும் காசு வசூலிக்கும் அரசு இந்து தர்மத்திற்கு ; கோவிலுக்கு ; பக்தர்களுக்குத் திருப்பி செய்த கைம்மாறு என்ன ? கோவிலில் பணத்தைக் கொட்டும் மக்களுக்கு அதை அரசு என்ன செய்கிறது என்று கேட்ப்பதற்கும் உரிமையுண்டு. அரசைப் பொறுத்தவரையில் கோவில்கள் முதலீடு இல்லாது வருவாயைக் கொட்டும் ஸ்தாபனங்கள்.  

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் இருக்கும் சிறப்பான ஏற்பாடுகள் உலகறிந்தவை ,பக்தர்களுக்கு வழங்கும் வசதிகள் ஏராளம், திருப்பதி தேவஸ்தானம் உலகின் பல இடங்களில் திருப்பதி கோவில் போன்று சிறிய வடிவில் கோவில்களை, திருப்பதி கோவிலின் தகவல் மையங்களை அமைத்து திருப்தி ஏழுமலையானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. [உதாரணம் : சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவில்] இப்படி இந்து சமய சேவையை சிறப்பாகவும், விரிவாகவும் செய்யும் திருப்தி தேவஸ்தானமும் அரசு சார்புடையது தான்.

நம் தமிழ்நாட்டில் புராதனமான , பழமையான பல கோவில்கள் இருந்தும் போதிய வசதிகள் இல்லாமல் இருகின்றன, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, திருநெல்வேலி என ஊருக்கு ஒரு பெரிய கோவிலை வைத்துக் கொண்டு அவற்றை முறையாகப் பராமரிக்காமல் வைத்திருப்பது யாருடைய தவறு?   
         
கோவில்கள்தான் நம் கலாச்சாரத்தின் அடிப்படை நம்மைப் பொருத்தவரையில் அவை வழிபடும் இடம் மட்டுமல்ல நம் வாழ்வோடு பிணைந்த கலாச்சாரத்தின் விழுமியங்கள், அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை.

கோவில் சொத்தைச் சூரையாடினால் 
கோவிலின் வளங்களைக் கொள்ளையடித்தால்
கோவிலின் புனிதத்தைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டால்

அதற்கான தண்டனையை ஆண்டவன் நிச்சயம் கொடுப்பான் ! 

No comments:

Post a Comment