Friday 27 March 2015

ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள்

தமிழ் நாட்டில் ராமன் என்றால் ஏதோ வேற்றுகிரகவாசி போல சிலர் சித்தரிக்கின்றனர், ராமனை ஆரியக் கடவுள் என்றும், தமிழருக்கும் ; தமிழ்நாட்டுக்கும் ராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ராமன் பார்ப்பனர்களின் சாமி என்றும், இன்னும் ஏராளம்... இப்படி தவறான கருத்துகளை பரப்புபவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும், அதில் எண்ணற்ற இடங்களில் ராமனின் புகழ் பதிவு செயப்பட்டுள்ளது என்று ! தொல்காப்பியம் ; புறநானுறு; அகநானுறு; சிலப்பதிகாரம்; மணிமேகலை; திருப்புகழ்; தேவாரம் என்ன அனைத்திலும் இருக்கிறான் ராமன் ! கம்பராமாயணம் ராமனின் உறைவிடம். ஆழ்வார்கள் ராமனை வணங்கியது நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வழியாக. 

தமிழ் இலக்கிய, வரலாற்று ஆதாரங்களுடன் ராமனின் புகழை, மகிமையை அறிந்துகொள்ள இந்த காணொளியைக் காண்க. See this video for more information. 

Thursday 19 March 2015

விவேகானந்தர் ஸ்டைல் !


இக்காலத்தில் நம்மிடையே சில சீர்திருத்தக்காரர்கள் இருக்கிறார்கள். நமது சமயத்தை அவர்கள் சீர்திருத்த விரும்புகிறார்கள். அதாவது, ஹிந்து தேசத்தை மறுமலர்ச்சியடையச் செய்ய, நமது சமயத்தை தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்களிடையே சிந்திக்கக் கூடியவர்கள் சிலரும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பெரும்பாலானவர் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மிகவும் முட்டாள்தனமாக நடக்கிறார்கள். இந்த ரகச் சீர்திருத்தக்காரர்கள் நமது சமயத்தில் அந்நிய நாட்டுக் கருத்துக்களை நுழைக்க வெகு உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் `உருவ வழிபாடு’ என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். “இந்து சமயம் நேர்மையானதல்ல. ஏனெனில் அது உருவ வழிபாடு நடத்துகிறது” என்று துணிந்து பேசுகிறார்கள்.

`உருவ வழிபாடு’ என்று அழைக்கப்படுவது எத்தகையது? அது நல்லதா, கெட்டதா என்று கண்டுபிடிக்க அவர்கள் ஒருபோதும் முனைவதில்லை. பிறரிடமிருந்து கருத்துக்களைக் கடன்வாங்கி, `இந்து சமயம் நேர்மையானதல்ல’ என்று கூச்சலிட்டுத் தாக்க அவர்களுக்குப் போதுமான துணிச்சல் இருக்கிறது.

உருவ வழிபாடு தவறு என்பது புளித்துப்போன பேச்சாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் சற்றும் நிதானித்துப் பார்க்காமல் அதனை உடனே ஒப்புக் கொண்டே வருகிறான். ஒரு சமயம் நானும் அவ்வாறு நினைத்திருந்தேன். அந்தக் குற்றத்துக்குத் தண்டனையாக, எல்லாவற்றையும் விக்கிரகங்கள் மூலம் அநுபவித்து உணர்ந்த ஒருவருடைய திருவடியின் கீழ் அமர்ந்து உபதேசத்தைப் பெற வேண்டியவனானேன். நான் குறிப்பிடுவது ராமகிருஷ்ண பரம ஹம்ஸரைப் பற்றியே.

உருவ வழிபாட்டால் அத்தகைய ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்கள் உண்டாக்கப்பட்டார்கள் என்றால் உங்களுக்கு எது வேண்டும்? சீர்திருத்த வாதியின் கொள்கைகளா? அல்லது ஏராளமான விக்கிரகங்களா? எனக்குப் பதில் அளிக்க வேண்டும். உருவ வழிபாட்டால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்களை உண்டாக்க முடியுமானால் மேற்கொண்டு ஆயிரம் உருவங்களைக் கொண்டு போங்கள். இறைவனருளால் உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எந்த வழிமுறை மூலமாவது அத்தகைய சீரிய இயல்பினரை உண்டாக்குங்கள்.

"அவர்கள் விரும்புவது மேலோட்டமான புரட்சி ; நான் விரும்புவது அடி முதல் முடி வரையிலான ஒட்டுமொத்தமான வளர்ச்சி !" இதுதான் விவேகானந்தர் ஸ்டைல் ; இதனால் தானே இவர் இன்றைய இளைய சமூகத்தின் ரோல் மாடல் ! மற்றவர்கள் நம் நாட்டைத் திட்டும் பொழுது ; என் நாடு புனிதமானது ; என் நாடு உலகின் குருவாக மாறும் என்றவர். இங்கு புரட்சியை விட வளர்ச்சியே தேவை என்றவர்.இந்தியாவின் ஆன்மீக வளங்களை உலகறியச் செய்தவர். 

நான் பெருமையோடு சொல்கிறேன்  'என் தலைவன் விவேகானந்தன் ' என்று.   

Friday 13 March 2015

பன்றிக்காய்ச்சல் பற்றிய ஒரு விழிப்புணர்வு புத்தகம்

                               பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் 
    பன்றிக்காய்ச்சல் வரமால் இருக்க பாதுகாப்பு முறைகள் 


பன்றிக்காய்ச்சல் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள
CLICK HERE
http://parivazhagan.blogspot.in/p/swineflu.html

Wednesday 11 March 2015

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !

இன்று அனைத்துப் பெற்றோர்களிடமும் தங்களுடைய பிள்ளை பொறியியல் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதுஇதில் தவறில்லை ஆனால் அதே சமயம் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

"பக்கத்துவீட்டு உறவினர் மகள்எதிர்வீட்டு அத்தையின் மகன்,சித்தப்பாவின் பையன்,ஒன்றுவிட்ட மாமாவின் மகன்" பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காகத் தங்களுடைய பிள்ளையும் பொறியியல் படித்தே ஆகா வேண்டும் என்பது சரியல்லவலுக்கட்டயமாக அவர்களைப் பொறியியல் படிக்க அனுப்பக்கூடாது.

to read full article click here...

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்

நம்நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் நம் மக்களின் படிப்பறிவு எழுத்தறிவு விகிதாச்சாரம் மிக குறைவாகவே இருந்ததுஅந்த சமயத்தில் இலவசங்கள் வழங்கப்பட்டனஆனால் இன்று கல்வியின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதுநம் மக்களிடம் படித்தோர் எண்ணிக்கை வளர்ந்து விட்டதுஇதுபோன்ற சமயத்தில் இலவசம் என்று கூறி சில காலம் மட்டும் பயன்தரும் இலவச திட்டங்களைப் புகுத்த முடியாதுதரமற்ற பொருட்களை இலவசமாக வாங்கினால் மக்கள் எளிதில் அதைக் கண்டுபிடித்து விடுவர்எனவே தவறான இலவச திட்டங்களை இப்பொழுது மக்கள் முன் கொண்டு செல்ல முடியாது.

இலவச திட்டங்களின் மீது சொல்லப்படும் முதல் குற்றச்சாட்டு அவை சோம் பேறித்தனத்தை வளர்க்கும் என்பது இலவசதிட்டங்கள் தொடர்ந்து வருவதால் அனைவருமே அதை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்பின் இது "வரமாக" மாறிவிடுவதால் அனைத்தும் இலவசமாக கிடைக்காத என்ற ஏக்கம் இதன் விளைவு உழைக்க மறுப்பது இதன் தாக்கம் இன்று தேர்தல் நேரங்களில் பணத்திற்காக தங்கள் ஓட்டுகளையும் மக்கள் விற்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

to read full article click here ...
http://parivazhagan.blogspot.in/p/blog-page_44.html