Sunday 28 September 2014

முதல்வர் ஜெயலலிதா கைது ! CM Jayalaitha arrest ...

ஒரு தமிழனாக நம்முடைய முதல்வர் அண்டை மாநிலத்தில் சிறைப் படுத்தப்பட்டு இருப்பது எனக்கு வருத்தமே; அதே சமயம் ஊழல் மலிந்த தேசமாக என் தேசம் மாறிவிடக் கூடாது. குற்றம் யார் செய்தாலும் குற்றமே, இல்லையேல் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
அதே சமயம் இந்தக் கடுமையான நீதி விசாரணை மற்ற ஊழல் அரசியல் வாதிகள் மீதும் நடத்தப்பட வேண்டும், இதில் பார பட்சம் காட்டக் கூடாது.
ஜெயலலிதா மட்டும் குற்றவாளி அல்ல ! 

இன்னமும் பெரிய திருடர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெளியில் சுதந்திரமாகத் தான் இருக்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது; இனியும் செய்ய வேண்டும் !


தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் !
எப்படி "ஸ்ரீ ராமன் 14 ஆண்டுகள் காட்டில் வன வாசம் இருந்த பொழுது, பரதன் பத்திரமாக நாட்டை ஆட்சி செய்து மீண்டும் ராமன் வந்தவுடன் ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தானோ " அது போல பன்னீர் செல்வமும் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து மீண்டும் "அம்மா" விடம் வழங்குவார். 

அம்மா மீண்டும் முதல்வராவார் !

No comments:

Post a Comment