Monday 25 August 2014

கடவுளின் பத்து அவதாரமும் (தசாவதாரம் ) "டார்வினின்" பரிணாம வளர்ச்சியும் ...(Dashavatara and Darwin)

1வது  அவதாரம் - மச்ச அவதாரம் (மீன்) - நீரில் வாழும் உயரினம். உயரினங்கள் முதன் முதலில் நீரில் தான் தோன்றின(டார்வின் கூற்றுப்படி) உதாரணம் ஒரு செல் உயரி "அமீபா" உலகில் தோன்றிய முதல் உயரினம்.

2வது அவதாரம் - கூர்ம அவதாரம் (ஆமை) - நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.

3வது அவதாரம் - வராக அவதாரம் (பன்றி) - நிலத்தில், குறிப்பாக சகதியில் (நீரும் மண்ணும் கலந்தது) குட்டைகளின் அருகில் நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடியது.

4வது அவதாரம் - நரசிம்ம அவதாரம் (சிங்கமும் மனிதனும் இணைந்தது) - மிருக குணமும், மனித குணமும் இணைந்தது, மனிதனுக்கு முந்திய பிறவி. மிருக இயல்பே மேலோங்கி இருந்தது. 

5வது அவதாரம் - வாமன அவதாரம் (குட்டையான மனிதன்) - முதலில் தோன்றிய சிறிய மனிதன்.

6வது அவதாரம் - பரசுராம அவதாரம் - முரட்டு மனிதன், காடுகளில் ஆயுதங்களுடன் வாழும் கடின மனிதன். 

7வது அவதாரம் - ராம அவதாரம் - முழுமையான மனிதன் ; சமுதாயமாக வாழும் ; சூது ; பொய்; சினம் கொள்ளாத மனிதன். நல்லவன்.

8வது அவதாரம் - கிருஷ்ணா அவதாரம் - அரசியலில், கால்நடை வளர்ப்பில் திறமையான மனிதன். சூப்பர் ஹீரோ.

9வது அவதாரம் - பலராம அவதாரம் - விவசாயத்திற்கு முன்னுரிமை; பூரண அறிவைத் தேடும் மனிதன். 

10 வது அவதாரம் - கல்கி அவதாரம் - "தீய செயல்கள்" செய்யும்
 மனிதனை அளிக்கும் கடவுளின் இறுதி அவதாரம். 

"சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை நீக்க; சமூகா சேவை செய்யும் ஒவ்வொரு மனிதனும் கல்கி அவதாரமே !" 

No comments:

Post a Comment