Tuesday 15 July 2014

வேண்டும் "வேத அறிவியல்"

நம்முடைய வேதங்களில்,உபநிதங்களில்,புராணங்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள், அறிவியல் சார்ந்த கருத்துகள்,அறிவியல் சார்ந்த விளக்கங்கள் முதலியனவற்றை நம்முடைய பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்த்தல் வேண்டும். 

இதன் மூலம் நம் முன்னோர்கள் விட்டுப்போன அறிவியல் ஆய்வுகளை நம் இளையதலைமுறை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.நம் நாட்டு ரிஷிகளும்,அறிவுஜீவிகளும் கண்டுபிடித்த விஷயங்கள் நமக்குப் பயன்படும்,அது நமக்கு பெருமையாகவும்,பயனுள்ளதாகவும் அமையும். 

இன்று பெரும்பான்மையான மக்கள் யாரும் வேதங்களைப் படிப்பதில்லை (ஏன் ஹிந்துக்கள் இன்று பகவத் கீதையைக் கூட யாரும் ஒழுங்காகப் படிபதில்லை)அதில் இருக்கும் கருத்துகள் நமக்குப் தெரியாமலேயே இருந்து விடுகிறன.அவை குறிப்பாக சமஸ்கிருதத்தில் இருப்பதால் நாம் யாரும் அதைப்படிப்பது இல்லை. இதற்கு ஒரே தீர்வு நம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அறிவியல் பாடத்தில் "வேத அறிவியல்" என்று நம்முடைய  முன்னோர் நமக்கு வழங்கிய கொடையான வேதங்களை நம் இளையதலைமுறை மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். 

"பிற மொழியில் இருக்கும் நல்ல நூல்களை, தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும்" என்றரர் தேசிய கவி பாரதி, அதற்கேற்ப சமஸ்கிருதத்தில் இருக்கும் அறிவியல் கருத்துகளை தமிழில் மொழிமாற்றம் செய்தல் வேண்டும். 

சம்ஸ்கிருத அறிவியலை புறம் தள்ளிவிட்டு "பகுத்தறிவு" பேசி என்ன பயன் ?   

No comments:

Post a Comment