Tuesday 29 April 2014

வரப்போகும் புதிய அரசாங்கத்திடம் நான் வைக்கும் கோரிக்கைகள்/என் விருப்பம்...

இந்தியாமுழுவதும் சோலார் தகடு மூலம் மின்சாரம்.படிப்படியாக அனுமின்சாரத்தைக் கைவிடல். (Solar Energy).

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தொடர் மின்சாரம் வழங்குதல்.

தேசப் பாதுகாப்பில் தீவிர கவனம்.

முறையான பொருளாதாரக் கொள்கை.அண்டை நாடுகளுடன் எச்சரிக்கையாக இருத்தல், அவர்களுடன் நல்லுறவை வளர்த்தல்.

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கங்கை காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தல்.நாட்டின் நீர்வளங்களைப் பாதுகாத்தல்.நிலத்தடி நீர்மட்டத்தை உயர்தல்.

விவசாயத்திற்கு முன்னுரிமையளிதல்.வன வளங்களை,இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்,அனைத்து மாநிலத்திலும் கட்டயமாக மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தல்.  

ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம், ஊழலில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை.

பிளாஸ்டிக் பொருட்களின் மீது கவனம் செலுத்தி, அதன் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.  

தமிழக மீனவர் நலனில் அக்கரை, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் உறுதியான முடிவு, அவர்களின் வாழ்வாதாரத்தில் அக்கரை செலுத்துதல்.

பரிவழகன்


No comments:

Post a Comment