Thursday 27 February 2014

எதிர்த்து நில்; உறுதியாக !


ஒருபுறம் குளம்மறுபுறம் உயரமான சுவர்வாராணசியில் அவற்றின் இடையே சாலையில் நடந்துகொண்டிருந்தார் விவேகானந்தர்பின்னால் ஏதோ சப்தம்திரும்பிப் பார்த்தார்பத்துப் பதினைந்து குரங்குகள் அவரைத் துரத்தி வந்தனஇப்போது என்ன செய்வது?

குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடத் தொடங்கினார்குரங்குகள் அவரை விடுவதாக இல்லைஅவையும் கன வேகமாக ஓடி அவரைத் துரத்தினதிடீரென்று ஒரு குரல் கேட்டதுமுன்னே சென்ற ஒருவரின் குரல்தான் அது...   

"குரங்குகளைக் கண்டு ஓடாதேஎதிர்த்து நில்உறுதியாக அவற்றை நோக்கி முன்னேறுபிறகு என்ன நடக்கிறது என்று பார்?''

விவேகானந்தர் அந்தக் குரல் சொன்னபடியே செய்தார்குரங்குகளின் பக்கம் திரும்பி எதிர்த்து நின்றார்குரங்குகள் திகைப்புடன் செயலிழந்து நின்றன.  பின்னர் மெல்ல குரங்குகளை நோக்கி உறுதியோடு நடந்தார் விவேகானந்தர்அவை அவரைத் தொடரவில்லைஅச்சத்தோடு தயங்கி நின்றனமெல்லப் பின்வாங்கினபிறகு அவரைவிட்டு வேகமாக ஓடி மறைந்தன.

விவேகானந்தர் எழுதுகிறார்: "இளைஞனேஅந்தக் குரங்குகள் எல்லாம் உன் வாழ்க்கையில் வரும் சோதனைகளேசோதனைகளைக் கண்டு அஞ்சி ஓடினால் அவை துரத்தும்.

தைரியமாக அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டால் சோதனைகள் விலகி ஓடிவிடும்சோதனைகளைக் கண்டு அஞ்சாதேசோதனைகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் எதிர்த்து நின்று வெல்வாயாக!''


விவேகானந்தர் மூளை பலம் மட்டுமல்லஉடல் வலிமையும் வேண்டும் என்கிறார்.'நாள்தோறும் கால்பந்து விளையாடுகீதை உனக்கு இன்னும் நன்றாகப் புரியும்என்று சொன்னவர் அல்லவா


அவர் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவைஒவ்வோர் இளைஞனும் நினைத்து நினைத்துத் தன்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும் உளிகளாக அவரது வார்த்தைகள் உருக்கொள்கின்றனஇன்றைய இளைஞர்கள் பின்பற்றுவதற்காக விவேகானந்தரது பொன்னான கருத்துகள் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment