Wednesday 13 November 2013

இனியாவது விதைப்போம்... நல்ல விதைகளை...


  • இன்று பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக மது அமைந்திருக்கிறது,இனி வரும் காலங்களில் மதுவினால் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிற குறையாது...இன்று நம் நாட்டில் நடக்கும் அனைத்து விதமான முக்கிய விழாக்களில்,பார்டிகளில் மது ஏதோ இன்றியமையாத பொருள் போல கலந்துவிட்டதுஇதன் விளைவு இனி வரும் நாட்களில் மிக மோசமான சம்பவங்களை நமது சமூகத்தில் விதைக்கும்மாணவர்களிடம் மதுவின் தாகம் தாகம் அதிகமாகி வருகிறதுஇந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நாம் பெருமைப்  பட்டுக்கொண்டலும்பெருவாரியான இளைஞர்கள் இன்று எந்தப்  பாதையில் செல்கிறார்கள் என்பது தான் இப்பொழுது முக்கியம்...புத்தகம் இருக்கவேண்டிய கையில் இன்று மதுக் குவளைபேனா பிடிக்க வேண்டிய விரல்களில் இன்று சிகிரட் என மாறி வருகிறது இந்த சுபாஷும்,விவேகானந்தரும்,காந்தியும்,பாரதியும் பிறந்த நாடு.
  • நம் வீட்டில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய முடியாத நாம்தான்...நாட்டில் இருக்கும் குப்பைகள் பற்றி  குறை கூறுகிறோம்...
    ஏவனோ ஒருவன் கொடுக்கும் பணத்திற்காக விஸ்வாசமுடன் விடிய விடிய  வேலை செய்கிறோம், நம்மை 25 ஆண்டுகள் பாதுகாத்த,பணம்கொடுத்த,நாம் மீது உண்மையான அன்பை பொழிந்த,அம்மா அப்பா என்ற இரு ஜீவன்கள் ஏதேனும் சொன்னால் மட்டும்  கோபம் வருகிறது நமக்கு...நம் கோபத்தை மற்றவர்கள் மீது காட்டமல்,காட்ட தைரியம் இல்லாமல் , இவர்கள் மீது தினிக்கிறோம்.
    அதற்காக மற்றவர்கள் மீது கோபப்படுங்கள் என்று கூறவில்லை, வயதான காலத்தில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பணம் அல்லஉண்மையான பாசம் தன்... கோபம் அல்ல ஆறுதலான வார்த்தைகள் தான்...இந்தியா என்ற நாடு பணத்தால் வாழவில்லை பண்பாட்டால் வாழ்கிறது...அதைப்பாதுகாப்பது  நம் கடமை...    

    Parivazhagan         

No comments:

Post a Comment